Saturday, July 4, 2015

பாலமுனைப் போராளிகளை ஏமாற்றிய ஆரிப் சம்சுதீன் mpc



பாலமுனையைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் போராளி ஒருவருக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலையில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவரது விபரங்களைப் பெற்றிருக்கின்றார்.

தற்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் பலருக்கும் தொழில் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆரிப் சம்சுதீனின் சிபார்சின் கீழும் பலருக்கு தொழில் நியமனம் கிடைத்துள்ளது.

இதில் பாலமுனையைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு தொழில் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளது. குறித்த இளைஞரை பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினர் சிபார்சு செய்திருக்கின்றனர்.
தனககுக் கட்டாயம் தொழில் கிடைக்கும் என நம்பியிருந்ததாகவும் கடைசியில் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர் எம்மிடம் தெரிவித்தார்.

கௌரவ மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் தன்னை ஏமாற்றியதாக குறித்து இளைஞர் பாதிக்கப்பட்டதாக மிகவும் கவலையாக கூறியமை குறிப்பிடத்தக்கது . 

இதே போல் எத்தைனையோ இளைஞர்களுக்கு  வேலை பெற்றுத்தருவதாக கூறி அவர்களது வாக்குரிமையை பெற்றதாக  இளைஞர்கள் கூறியதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment