Saturday, July 4, 2015

முதலமைச்சர் ஹரினுக்கு “உனக்கு தலை சரியில்லை” எனத்திட்டிய பிரதமர் ரணில்

தான் இந்நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கருத்து வெளியிடுவதனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை திட்டியதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி செயற்பாட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“உனக்கு தலை சரியில்லை” என பிரதமர் ஊவா மாகாண முதலமைச்சரிடம் கேட்டுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக இருந்தபோது அவரது 88 கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தல் காலங்களில் தனது வீட்டிற்கு வந்து நேரத்தை செலவிடுவார் எனினும் தற்போது அவ்வாறு இல்லை என ஹரின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment