Saturday, July 4, 2015

இப்தார் நேரத்தில் பள்ளிவாயலில் மீண்டும் குண்டு வெடிப்பு

சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிப்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இம்பெற்றுள்ளது.
இதில் அல் கொய்தா  இயக்கத்துக்கு ஆதரவான அல்- நுஸ்ரா முன்னணியின் முக்கிய தலைவர் ஒருவர் உள்ளிட்ட 25 பேர் பலியாகினர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளதாக, அங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை  ரமழான் நோன்பினை நிறைவு செய்வதற்கான இப்தார் நிகழ்வில் மக்கள் ஒன்று கூடி இருந்த போது இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை.இதற்கு யாரும் இன்னும் உரிமை கோரவும் இல்லை.

No comments:

Post a Comment