Thursday, November 28, 2013

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று மாணவர் கவன ஈர்ப்புப் போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியை  வெளியேற்றுவதற்கு எடுத்த முயற்சிக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கோரிமாணவர்களினால் கவன ஈர்ப்பு போராட்டம் பல்கலைக்கழகத்தின் முன் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  இன்று (28) நண்பகல் 12.00மணி தொடக்கம் ஒரு மணி வரை நடத்தப்பட்டது. 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் எங்கள் எதிர்காலம் பீடாதிபதிகளின் கைகளில், பீடைகளை ஒழிப்போம் பீடத்தினைக் காப்போம், தொல்லை கொடுப்பவனே தொலைந்துபோ, போன்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். 

No comments:

Post a Comment