பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் நேற்று பதன்கிழமை புகுந்து வன்முறையில் ஈடுபட் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு தேரர் இன்றுக்காலை சென்றிருந்த வேளையிலேயே பொலிஸார் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போதே நீதவான் எஸ்.எம்.ரஹ்பீக் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.
தேரருக்கு பிணை வழங்கிய நீதவான் வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment