Thursday, November 21, 2013

ரணிலின் அறையில் விரியன் பாம்பு - வரவு-செலவுத் திட்ட உரையை புறக்கணிக்க ரணிலின் நாடகமா

பாராளுமன்ற கட்டடத்தில் உள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அறையில் இருந்து விரியன் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
குறித்த அறையில் உள்ள தொலைபேசியை சரிசெய்துக் கொண்டிருந்த ஊழியர் இன்று பகல் 12 மணிக்கு இப்பாம்பை கண்டுள்ளார்.
பூச்சாடி ஒன்றிலுள் குறித்த பாம்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இயற்கையா அல்லது விபத்து அறிகுறியா என பாராளுமன்ற உறுப்பினர்கள் கதைக்கத் தொடங்கியுள்ளனர்.
இன்று நடைபெறும் வரவு-செலவுத் திட்ட உரையை புறக்கணிக்க ஐதேக தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment