Wednesday, November 27, 2013

குடியேற்றவாசிகளுக்கான சலுகைகள் தொடர்பான விதிகள் கடுமையாக்கப்படவுள்ளது – டேவிட் கெமரன்

குடியேற்றவாசிகளுக்கான சலுகைகள் தொடர்பான விதிகள் கடுமையாக்கப்படவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரன் குறிப்பிட்டுள்ளார்.

வேலையற்றோருக்கான சலுகைக்கு தகுதியானவர்கள் தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்படவுள்ளதுடன், வீட்டுத் திட்டங்கள் தொடர்பான சலுகைகளும் குறைக்கப்படவுள்ளதாக அவர்  கூறினார்

பல்கேரியா மற்றும் ரொமேனியா போன்ற நாடுகளில் இருந்து வருகை தந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை குறித்து நாட்டு மக்கள் கவலை கொண்டுள்ளதாக கெமரன் சுட்டிக்காட்டினார்.

எனினும் இந்த தீர்மானம் ஆவேசமான ஒன்றெனக் கூறியுள்ள ஐரோப்பிய ஆணையாளர் பிரித்தானிய ஒர் மோசமான நாடாக நோக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் சுந்திரமாக நடமாடுவது தொடர்பான விதிமுறை குறித்தும் டேவிட் கெமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த உரிமை தேவையற்ற ஒன்றெனவும் பிரித்தானியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment