Monday, November 18, 2013

நிந்தவூர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுக்கு மேலாக கல்முனை - அம்பாறை பிரதான வீதிக்கு குறுக்காக பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்யப்பட்டு சற்று முன்னர் கலைக்கப்பட்டது.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு எதிராக பிரதேச மக்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டமானது கலகத் தடுப்பு பொலிஸாரின் உதவியுடன் கலைக்கப்பட்டது. அத்துடன் குறித்த பிரதேசத்தில் 500 இற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment