Friday, November 29, 2013

அடைக்கலம் புகுந்த சிறுவர்களை இச்சைக்கு பயன்படுத்திய பிக்கு

வவுனியா மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த வவுனியா அட்டமஸ்கட சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் பல மோசமான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்டமஸ்கட சிறுவர் இல்ல விகாராதிபதியினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக சிறுவன் ஒருவன் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் அங்கிருந்த சிறுவர்களை பொறுப்பேற்று அவர்களை மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமையும் சிறுவர்கள் சித்திரவதை செய்யப்பட்டமையும் உறுதிப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் கடந்த 6ம் திகதி சந்தேகத்தின் பெயரில் விகாராதிபதி கல்யாணதிஸ்ஸ தேரர் கைது செய்யப்பட்டு 14 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த கருணை போதிக்கும் ஒருவரது இல்லத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர் உரிமை மீறல்களுக்கு நீதியான விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுவதன் மூலமே இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்தலாம் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

மேற்படி சிறுவர் இல்லத்தில் துஸ்பிரயோகம் இடம்பெற்ற பிரச்சனை தெரியவந்ததைத் தொடர்ந்து அங்கிருந்த பல சிறுவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வெளியேறியிருந்த சிறுவனின் ஒருவனே தற்போது முறைப்பாடு செய்துள்ளான்.

இன்னும் பல சிறுவர்கள் வெளியில் இருப்பதால் அவர்களையும் கண்டு பிடித்தால் இன்னும் பல மோசமான தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனூடே இன்னும் பல பிக்குமார் மாட்டுப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment