Saturday, November 16, 2013

பொதுநலவாய சிறிலங்கா மாநாட்டினை புறக்கணி : மலேசியத் தமிழர்கள் போராட்டம் !

நாதம் ஊடகசேவை

சிறிலஙகாவில் இடம்பெற்று வரும் பொதுநலவாய மாநாட்டினை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் மலேசியத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலேசிய மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்கட்சி அரசியல் தலைவர்கள் , தமிழர் சமூக அரசியல் பிரமுகர்கள் இக்கோரிக்கையினை மலேசிய அரசுக்கு முன்வைத்திருந்தனர். 140க்கும் மேற்பட்ட மலேசிய அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கையொன்றினையும் ஏலவே விடுத்திருந்தன.

இதனொரு அங்கமாக தலைநகர் கோலாலம்பூரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையுடன் தமிழர் முன்னேற்ற இயக்கம் அமைப்பானது கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது.


பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு தமிழகத்தில் எழுந்திருக்கும் நிலைப்பாடுகளை சுட்டிக்காட்டி, ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் உள்நாட்டுநிலைமை காத்திரமான பாத்திரத்தை ஆற்ற முடியும் என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் கொண்டுவந்திருந்த தீர்மானத்தில் மலேசியா வாக்களிக்காமல் ஒதுங்கி கொண்டிருந்தமைக்கு உள்நாட்டில் எழுந்த நிலைபாடுகள் பிரதான காரணமாக அமைந்திருந்தன.

தனது குடிமக்களில் பத்து வீதத்தினை கொண்டுள்ள மொரிசியஸ் நாட்டில் பிரதமர் சிறிலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டினை புறக்கணித்திருந்தார்.

இந்நிலையில் உலகத் தமிழர்கள் தங்கள் நாடுகளில் ஈழத்தமிழர் விவகாரத்தில் முன்னெடுக்கின்ற செயற்பாடுகள் அந்தந்த ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு காத்திரமான பங்கினை ஆற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment