Sunday, November 17, 2013

கிறிஸ் மனிதனின் அட்டகாசமும் - நிந்தவூர் மக்களின் ஆவேசமும் !!

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. கல்முனை அக்கரைப்பற்று போக்குவரத்தும் ஸ்தம்பிதம். மக்கள் பாதைகளில் டயர் மற்றும் கட்டைகள் போட்டு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதன் பின்னனியை பார்க்கின்ற போது நிந்தவூர் கடற்கரைப்பகுதியில் இம்மனிதர்கள் உடை மாற்றிக்கொண்டிருந்த வேளை நிந்தவூர் இளைஞர்கள் மடக்கி பிடித்ததாகவும் 04 பேர் கல்முனைப் பொலீசில் இருப்பதாகவும் 02 வர் தப்பி ஓடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன்போது ஏற்பட்ட கைகலப்பில் சம்மாந்துறை பொலிசார் உட்பட நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் அவர்களுக்கும் மற்றும் இன்னும் சில பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவம் தகவல் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment